வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கேன்சரா-இவரைப் பாருங்கள்- பைசா செலவில்லாமல்

கேன்சரா-இவரைப் பாருங்கள்- பைசா செலவில்லாமல்

புற்றுநோயில் (கேன்சர்) பல வகைகள் உள்ளன.அனைத்து தரப்பிலும் இது பரவி வருகிறது.நாம் சாப்பிடும் உணவுகள் முலமாக தற்சமயம் அதிகம் பரவி வருகிறது.கேன்சர்க்கு தற்சமயம் பலமருத்துவ முறைகள் வந்துள்ளன ஆனால் அவற்றிற்கான செலவுகளும் மிக அதிகம்.

எனது நண்பருக்கு கல்லீரல் புற்றுநோய் உருவாகி நன்று வளர்ந்தும் விட்டது.5 வருடங்களாகவே அவருக்கு வயிற்று வலி வந்து கொண்டு இருந்ததாம் அவர் போலிடாக்டரிடம் சென்று ஊசியும் குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.அதன் பிறகு கொஞ்ச நாள் வலி இல்லாமல் இருக்குமாம்.இப்படியே 5 வருடங்களை கழித்துள்ளார் எவ்வித பரிசோதனையும் எடுக்காமல்.1 மாதத்திற்கு முன்பு வலி மிக அதிகமாகி வேற மருத்துவமனை சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார் அப்பொழுது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் என்று தெரியவந்குள்ளது.அம் மருத்துவர் இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்கலாம் இல்லை என்றால் 6 மாதத்திற்குள் இவர் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார்.குறைந்தது 10 லட்சம் செலவாகுமாம் யாரேனும் கல்லீரல் தானம் தந்தால் தான் அறுவைசிகிச்சை செய்யமுடியுமாம்.

நண்பர் ஒரு சில பெரிய மருத்துவமனைக்கும் சென்றுள்ளார் அங்கும் இவ்வாறே கூறியுள்ளனர்.அதன் பிறகு நிறைய இடங்களில் விசாரிக்கும் பொழுது தான் கேரளா மாநிலம் கோட்டயம் அருகில் இருக்கும் இந்த திறமையான மருத்துவரை பற்றி தகவல் கிடைத்தது.அவரிடம் தொலைபேசியில் முன்பதிவு பெற்று அவரை நேரடியாக போய் சந்தித்தோம்.அவர் நண்பரின் மெடிக்கல் ரிப்போர்ட் அனைத்தையும் பார்தது இப்புற்று நோயை முழுவதும் சரிசெய்ய இயலாது என்றும் ஆனால் இதன் பாதிப்பை குறைக்க முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.எங்களிடம்; அவர் எவ்வித கட்டணமும் வசூலிக்கவில்லை அத்துடன் இலவசமாகவும் மருந்து அளித்தார்.நாங்கள் எவ்வளவு முயன்றும் அவர் கட்டணம் வாங்க மறுத்து விட்டார்.இக்காலத்தில் இப்படிப்பட்ட மருத்துவர்.



டாக்டரை பற்றி:
பெயர்:சி.பி.மேத்யு MBBS,MS,DMR,
அவரது இணையதள முகவரி:http://drmathewscancercure.org/index.php
தொலைபேசி எண்:0481-2320224

சென்னையில் மருத்துவபடிப்பை முடித்தவர்.1969 முதல் கேரளா மருத்துவ கல்லுரிகளில் ரெடியோதெரபி துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.கேன்சர் நோய் தீர்ப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவான 
ஆய்வு மேற்கொண்டு 1984 ம் ஆண்டு புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.அலோபதி,ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி அனைத்தும் கலந்து தான் சிகிச்சை அளித்து வருகிறார்.இதுவரை 2500 க்கு மேற்பட்பவர்களை இச்சிகிச்சை முலம் காப்பற்றியுள்ளாரம்.74 வயதிற்கு மேலாகியும் இன்றும் சிறப்பான சிகிச்சை அளித்திக் கொண்டு இருக்கிறார்.உங்களது தெரிந்தவர்கள் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால் தயவுசெய்து இவரை பார்க்க சொல்லுங்கள்.உறுதியாக குணமடையும்.என் நண்பருக்கு அவரிடம் சிகிச்சைக்கு சென்று வந்த பிறகு வலி குறைந்குள்ளது.வாழ்த்துவோம் இவரது சேவையை.


12 கருத்துகள்:

  1. டாக்டர் சி.பி.மேத்யு அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து எல்லோரையும் குண்படுத்த இறைவன் அருள் புரிய வேண்டும்.
    மருத்துவர் அவர்கள் வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    சேவை தொடர வாழ்த்துவோம்.
    நல்லபகிர்வு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஜயா

    பதிலளிநீக்கு
  3. ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த தகவல் கிடைத்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்துகிறேன் நண்பா.உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு புற்றுநோய் இருந்தால் இத்தகவலை அளியுங்கள்.

      நீக்கு
  4. நல்ல விஷயம் ... அனைவருடமும் பகிரவேண்டிய செய்தி

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜயா

      நீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜயா

    பதிலளிநீக்கு
  7. அடுத்தவருக்கு உதவும் படியாக பதிவு அமைத்ததற்கு
    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு